ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ரெயில்களில் அலைமோதிய கூட்டம்!
வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரம்ஜானை சரியாக கொண்டாட முடியாத நிலை இருந்தது.
தற்போது தொற்று குறைந்துள்ளதால், ரம்ஜான் பண்டிகை வங்காளதேசத்தில் களை கட்டியுள்ளது. வெளியூரில் இருந்து தலைநகருக்கு வேலை நிமித்தமாக தங்கியுள்ள தொழிலாளர்கள், சொந்த ஊர் நோக்கி படையெடுத்தனர். இதனால், கடந்த சில நாட்களாகவே டாக்காவில் இருந்து செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ரயில் பெட்டிகளுக்குள் இடம் இல்லாததால் மக்கள் ரயிலுக்கு மேலேயும் அமர்ந்து ஆபத்தான வகையில் பயணிக்கின்றனர். ரயில்கள் மட்டுமல்லாமல் படகுகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.
தலைநகரில் இருந்து பல லட்சம் பேர் ரயில்களிலும், பேருந்துகளிலும், படகுகளிலும் சொந்த ஊருக்கு செல்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.


