அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகளில் சைபர் தாக்குதல்! பரபரப்பு தகவல்
அமெரிக்காவில் 5 மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் சைபர் கிரைம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா, டென்னசி உள்பட 5 மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 900-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் இருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்ட மருத்துவமனைகளில் சர்வர்கள் அணைத்து வைக்கப்பட்டது.
மேலும் அங்கிருந்த நோயாளிகள் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதன் காரணமாக அங்கு சுகாதார சேவைகள் பெரிதும் முடங்கின.
இது தொடர்பில் சைபர் கிரைம் பொலிஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் ரஷ்யாவை சேர்ந்த 9 பேரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார்.