கனேடிய மாகாணத்தில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் எவ்வளவு? நிபுணர்கள் கணிப்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் புயல் மற்றும் பெருவெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதமானது உண்மையில் கணிப்புக்கும் அப்பாற்பட்டது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வார தொடக்கத்தில் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெரும்பாலான பகுதிகள் மூழ்கின.
பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன், பலரது வீடுகள் மற்றும் உடைமைகள் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்திய புயலால் ஏற்பட்டுள்ள சேதமானது மிகக் கடுமையானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரொறன்ரோல் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் காப்பீட்டாளர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டது. அதே ஆண்டு கல்கரியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 1.7 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டது.
ஆனால் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட தற்போதைய பெருவெள்ளச் சேதமானது கணிக்க முடியாதது என்கிறார்கள் நிபுணர்கள்.
இதனிடையே Abbotsford நகர மேயர் தெரிவிக்கையில், தங்கள் நகரத்தில் மட்டும் சேதம் 1 பில்லியன் டொலர் என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இது முழுமையான கணிப்பு அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் காப்பீடு இல்லை எனவும், கப்பீடு செய்யப்பட்ட சொத்துக்களுக்கும், அதை மீட்பது என்பது மிகவும் சிரமமானது என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.