22 வயது மருமகளை கொலை செய்து உடலை கடற்கரையில் வீசிய மாமனார்; வெளியான திடுக்கிடும் தகவல்
இந்தியாவில் மருமகளை கொலை செய்து உடலை பிளாஸ்டிக் பையில் அடைத்து மாமனார் கடற்கரையில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மும்பை மலாடு அக்சா கடற்கரையோரமாக பிளாஸ்டிக் பை ஒன்றில் இளம்பெண்ணின் உடல் கடந்த வாரம் பொலிசாரால் மீட்கப்பட்டது.
இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், கொலையான பெண் நந்தினி என்ற நளினி (வயது22) என்பது தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மராட்டிய மாநிலம் மும்பை காந்திவிலி பொய்சர் பகுதியை சேர்ந்த பங்கஜ் ராய் இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நந்தினி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். எனினும் இந்த திருமணத்தில் பங்கஜின் தந்தை கமல் ராய்க்கு (55) விருப்பம் இல்லாமல் இருந்தது.
அதோடு நந்தினியின் நடத்தையில் மாமனார் கமல் ராய்க்கு சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பங்கஜ் வேலைக்கு கிளம்பி சென்ற நிலையில், தனியாக இருந்த நந்தினியை கொலை செய்ய கமல் முடிவெடுத்தார்.
இதையடுத்து தனது இரு நண்பர்கள் கிருஷ்ணா குமார் சிங், பிரதீப் குப்தா உதவியுடன் தூங்கி கொண்டிருந்த நந்தினி முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்த பின்னர் சடலத்தை பிளாஸ்டிக் பையில் வைத்து கட்டி கடற்கரை பகுதியில் தூக்கி போட்டிருக்கிறார்.
இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றிவிட்டு கமலை கைது செய்துள்ளனர்.