பிரான்சில் 80 ஆயிரத்தைக் கடந்தது கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பாரிய மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் ஸ்பெயின் 6-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைத் தாண்டியுள்ளதுடன் அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது.
கொரோனாவில் இருந்து 2.38 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ள நிலையில் அங்கு 30 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.