அமெரிக்காவில் நிலவும் பற்றாக்குறை உதவிக்கரம் நீட்டிய நாடு!
அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பால்மாவுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. அதைத் தீர்க்க, பால்மா வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளது.
அந்த வகையில் ஜெர்மனியிலிருந்து விரைவாக அனுப்பப்பட்ட பால்மா முதல் தொகுதியில் 31,751 கிலோகிராம் பால்மா இருந்தது.
உடனடித் தேவையில் 15 வீதத்தைப் பூர்த்தி செய்ய அது உதவும் என்று சி.என்.என் செய்தி நிறுவனம் கூறியது. இண்டியானா மாநிலத்திலுள்ள பால்மா உற்பத்தி நிறுவனமான நெஸ்லே மையத்திற்கு பால்மா அனுப்பப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவுக்குக் கூடுதல் பால்மா தருவிக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) கூறியுள்ளார்.
கொவிட் பரவலை ஒட்டி குழந்தைகளுக்கான பால்மா தட்டுப்பாடு அமெரிக்காவில் தீவிரம் அடைந்துள்ளது. இதனை அடுத்தே போர்க்கால சட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கான பால்மா ஐரோப்பியத் தயாரிப்பாளர்களிடமிருந்து வேகமாக விமானம் மூலம் தருவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் மூடப்பட்டிருக்கும் குழந்தைகளின் பால்மா தயாரிப்பு நிறுவனம் தனது தயாரிப்புகளை மீண்டும் ஆரம்பிக்கக் காலமெடுக்கும் என்று தெரிவித்துள்ளது.