மரியுபோலில் 200 உடல்கள் கண்டெடுப்பு: அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெறாதபோதும், முக்கிய துறைமுக நகரான மரியுபோலை ஒருவழியாக ரஷ்யா முற்றிலுமாக கைப்பற்றியுள்ளது.
3 மாத கால போரில் இந்த நகரத்தின் கட்டிடங்கள், ரஷ்ய துருப்புகளின் தாக்குதலில் எலும்புக்கூடுகளாக காட்சியளிக்கின்றன.
இந்த நகரத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் இடிபாடுகளில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா முழுமையான போரை தொடுத்துள்ளது என்று உக்ரைன் அதிபர் வோலாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) குற்றம் சாட்டியுள்ள நிலையில், 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு ஆதாரமாகி உள்ளது.
ஐரோப்பா கண்டத்தில் 77 ஆண்டு கால வரலாற்றில் இப்படி ஒரு போர் நடந்தது இல்லை என்று உக்ரைன்அதிபர் வோலாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.