தண்ணீரை பயன்படுத்தவேண்டாம்... கனேடிய நகரம் ஒன்றிற்கு அவசரமாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனேடிய நகரமான Halifaxக்கு தண்ணீர் பயன்பாடு தொடர்பில் அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. Halifax நகருக்கு Grand Lake என்னும் ஏரியின் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
Halifax, Enfield, Elmsdale மற்றும் Lantz ஆகிய பகுதிகளில் வாழும் சுமார் 10,000 பேர் அந்த தண்ணீரை பயன்படுத்திவருகிறார்கள். இந்நிலையில், விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில், அந்த தண்ணீரை பயன்படுத்திய விலங்குகள் இறந்துபோனதாகவும், ஒரு மனிதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஏரியின் தண்ணீரை பெறுபவர்கள், அதை கொட்டிவிடுமாறும், அதை குடிக்கவோ, குளிக்கவோ, சமைக்கவோ அல்லது கால்நடைகளுக்கு அந்த தண்ணீரை கொடுக்கவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்படும் வரை, யாரும் அந்த ஏரியின் அருகில் கூட செல்லவேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.