சுவிட்சர்லாந்தில் நாய் குரைக்கும் சத்தத்தை கேட்டு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி; காப்பாற்றப்பட்ட இரு உயிர்கள்
தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் நடந்து கொண்டிருந்த சிலர் நாய் ஒன்று, விடாமல் குரைக்கும் சத்தத்தை கவனித்துள்ளனர். நாயின் சத்தம் அவர்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து சத்தம் போடும் நாயை நோக்கி சென்றுள்ளார்கள்.
ஆளில்லாத இடத்தில் மிகவும் பதட்டமாக அதேசமயம் ஒரு வித தவிப்புடன் குரைத்துக் கொண்டிருந்த அந்த நாய் இருக்கும் இடத்தின் அருகே அதைக் கண்டவர்கள் சென்றிருந்தனர்.
அப்போதுதான் அங்கே இரண்டு கைகள் பனியிலிருந்து நீட்டிக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். இதனையடுத்து உடனடியாக வேகவேகமாக அந்த இடத்தை தோண்டி இருக்கிறார்கள். அப்போதுதான் இரண்டு பேர் அந்த பனிக்குள் புதைந்து கொண்டு இருப்பதை கண்டுள்ளனர்.
இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டிருந்த நிலையில் குளிரால் இருவருக்கும் hypothermia என்கிற பிரச்சினை ஏற்பட்டு தவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களை இருவரையும் பத்திரமாக மீட்டு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் தனது செயலால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த எஜமானர்கள் இருவரையும் மீட்க உதவிய வளர்ப்பு நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.