வதந்திகளை நம்ப வேண்டாம்: உருக்கமுடன் நடிகை சமந்தா வெளியிட்ட பதிவு!
சமூகவலைதளங்களில் என்னை பற்றி தற்போது பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என நடிகை சமந்தா டீவிட்டர் பக்கத்தில் உருக்கமுடன் பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் சில காரணங்களுக்காக திருமண உறவை முறித்து கொள்வதாக அறிவித்து கடந்த 2 ஆம் தேதி திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து அவரவர் வழியில் செல்ல முடிவு செய்துள்ளோம்” என்று அதிகாரபூர்வமாக விவாகரத்து குறித்து அறிவித்தனர்.
— Samantha (@Samanthaprabhu2) October 8, 2021
இந்த விவாகரத்து அறிவிப்புக்கு நான் பிறருடன் தவறான உறவில் இருக்கிறேன், குழந்தை வேண்டாம் என மறுத்தேன், கருக்கலைப்பு செய்திருக்கிறேன் என இப்படி ஏராளாமான வதந்திகள் சமூகவலைதளத்தில் பரவிவந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமுடன் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
விவாகரத்து என்பது வலிமிகுந்தது. இதிலிருந்து மீண்டுவர எனக்கு நேரம் தேவைப்படுகிறது. என் மீதான இந்த தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்ந்து வரதான் செய்யும். ஆனால், இதனை இனியும் அனுமதிக்கமாட்டேன். என டீவீட்டரில் தெரிவித்திருக்கிறார்.