மன வளர்ச்சி குன்றிய பெண்ணின் கோரிக்கையை ஏற்காத அதிகாரிகள்: தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட சோகம்
மன வளர்ச்சி குன்றிய பெண் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடும்படி பல முறை அவரது குடும்பத்தார் கேட்டுக்கொண்ட நிலையிலும், அதிகாரிகள் செவிமடுக்க மறுத்துள்ளதால், அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
Toula Zouzoulas (44), Down syndrome என்னும் குறைபாடு கொண்டவர். அவருக்கு கொரோனா எளிதில் தொற்றும் வாய்ப்புள்ளதால், அவருக்கு தடுப்பூசி போடும்படி அவரது குடும்பத்தார் அதிகாரிகளை வேண்டிக்கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
ஒன்ராறியோ விதிகளின்படி மே 3ஆம் திகதிதான் Toulaவுக்கு தடுப்பூசி போடப்படும் என அதிகாரிகள் கூறிவிட்டிருக்கிறார்கள். இதற்கிடையில், Toulaவுக்கு வயிற்றில் புண் ஏற்பட, அவர் அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் இருக்கும்போதே அவருக்கு கொரோனா தொற்றியுள்ளது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர்.
Down syndrome குறைபாடு கொண்டவர்களுக்கு கொரோனா அபாயம் அதிகம் என்பதை அரசு உணர்ந்துகொள்ளவில்லை, அவர்கள் என் சகோதரியை கைவிட்டுவிட்டார்கள் என்கிறார் அவரது சகோதரியான Olga Zouzoulas.
அவர்கள் மட்டும் நாங்கள் கெஞ்சியபோது என் சகோதரிக்கு கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால், இப்போது அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கவேண்டிய நிலை வந்திருக்காதே என்கிறார் அவர்.
Down syndrome குறைபாடு கொண்டவர்களுக்கு கொரோனா தொற்றுமானால், அவர்களால் அதை எதிர்த்துப் பொராடமுடியாது, அவர்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகம் என ஆய்வுகளில் ஏற்கனவே தெரியவந்தும், விதிகளின்படி செல்வதாகக் கூறி அதிகாரிகள் Toulaவுக்கு தடுப்பூசி போட மறுத்துள்ளார்கள்.
தனக்கு பதில் வேண்டும் என்று கூறும் Olga, எதிர்காலத்தில் இதுபோல் நிகழாமல் தடுக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்கிறார்.