ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பில் அதிரடி நடவடிக்கை ; IAEA தீர்மானம்
ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்த ஆய்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அந்த நாட்டின் மீது ஐநா பாதுகாப்புச் சபையில் அறிக்கை தாக்கல் செய்ய சர்வதேச அணுசக்தி முகவரகம் (IAEA) ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச அணுசக்தி முகவரகத்திலுள்ள 35 உறுப்பினர்களில் 23 பேர் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
எட்டு நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமலும் நடுநிலை வகித்ததோடு ரஷ்யா, சீனா மற்றும் நைஜர் ஆகிய நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்தன.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தை ஐநாவுக்கான ஈரானிய நிரந்தரப் பணிமனை கண்டித்துள்ளது.
இது ஒரு "சார்பான, அரசியல் ரீதியான தீர்மானம்" என்று ஈரான் விமர்சித்துள்ளது. இதற்கிடையே, ஓமானுக்கான ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகைக்கு எதிராக ஈரான் தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) அமைப்பு அமெரிக்கக் கப்பல்களைக் குறிவைத்ததாகக் கூறும் நிலையில், எந்தவொரு அமெரிக்கப் போர்க் கப்பலும் பாதிக்கப்படவில்லை என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புப் சபையில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு வீட்டோ (Veto) அதிகாரம் இருப்பதால், ஈரானுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதை அந்த நாடுகள் தடை செய்ய வாய்ப்புள்ளது.