பிரபல ஆலய மகோற்சவ தினத்தில் மதுபோதையில் வந்த குருக்கள்!
வவுனியாவில் உள்ள பிரபல ஆலயம் ஒன்றிற்குள் மதுபோதையில் நுழைந்த குருக்களை ஆலய பக்தர்கள் விரட்டியடித்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு (10-09-2023) இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பக்தர்கள் விசனம்
வவுனியா பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தரின் கண்காணிப்பின் கீழ் உள்ள ஆலயம் ஒன்றின் மகோற்சவம் நடைபெற்று வருகின்றது.
இதன்போது மகோற்சவத்திற்கு வருகை தந்த குருக்கள் மதுபோதையில் ஆலயத்திற்கு சென்று பூஜை செய்துள்ளார்.
இதன்போது குருக்கள் மதுபோதையில் இருந்துள்ளதுடன், அவரிடமிருந்து சாராயப் போத்தல் மற்றும் மாவா என்பனவும் ஆலயப் பக்தர்களால் மீட்க்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆலய பக்தர்கள் பிறிதொரு குருக்களை அழைத்து, அவரிடம் குறித்த குருக்களை ஒப்படைத்து ஆலயத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் மாவட்ட அந்தணர் ஒன்றியம், மாவட்ட மற்றும் பிரதேச செயலக இந்து காலாசார உத்தியோகத்தர் ஆகியோரிடமும் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.