மியன்மார் தாய்லாந்தை உலுக்கிய பூகம்பம்; கட்டிடத்திற்குள் அலறல் சத்தம்
தாய்லாந்தின் பாங்கொங்கில் பூகம்பத்தினால் இடிந்துவிழுந்த கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்கள் அலறும் சத்தம் கேட்பதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பாங்கொக்கின் பாங் சூமாவட்டத்தின் பொலிஸ் அதிகாரியொருவர் ஏஏவ்பிக்கு இதனை தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் தலைநகரம் முன்னர் ஒருபோதும் இவ்வாறான பூகம்பத்தை எதிர்கொண்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நய்பிடாவ் மருத்துவமனையில் சிகிச்சை
தங்களை காப்பாற்றுமாறு பொதுமக்கள் அலறுவதை நான் கேட்டேன், காப்பாற்றுமாறு மன்றாடுகின்றனர் என தெரிவித்துள்ள அவர், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்திருக்கவேண்டும் என மதிப்பிட்டுள்ளோம்.
ஆனால் இன்னமும் உயிரிழந்தவர்கள் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்யும் நிலையிலேயே உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
இடிபாடுகளில் பல உயிர்கள் பறிபோயுள்ளதாக அஞ்சுகின்றேன், இவ்வாறான சக்திவாய்ந்த பூகம்பத்தை நாங்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மியன்மாரின் நய்பிடாவ் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானவர்களிற்கு சிகிச்சையளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்த நூற்றுக்கணக்கானவர்கள் வருகின்றனர் என அவசரசேவை பிரிவு காயமடைந்துள்ளது என பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்கு வருபவர்களின் களின் உடல்கள் இரத்தத்தாலும் புழுதியாலும் மூடப்பட்டுள்ளது எனஏஎவ்பி தெரிவித்துள்ளது.