நடந்துகொண்டிருந்தவருக்கு எமனான மலர்சாலை வாகனம்
திருமலையில் உள்ள பிரபல மலர்சாலையின் வாகனம் மோதி வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவம் இன்று புதன்கிழமை (20) காலை இடம்பெற்றுள்ளது.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமலை – நிலாவெளி பிரதான வீதியின் ஆனந்தபுரி பகுதியில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் மீது அவ்வீதியால் பயணித்த மலர்சாலை வாகனம் ஒன்று மோதியதில் வீதியில் பயணித்த குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் பழனியாண்டி (வயது 78) என்ற நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.