கனடா முதல் ஐரோப்பிய ஒன்றியம் வரை; மகிழ்ச்சிப்படுத்திய மகாராணி!
கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா அடங்கலாக G7 நாடுகளின் உச்சி மாநாடு நேற்று பிரித்தானியாவில் உத்தியோக பூர்வமாக ஆரம்பமானது.
G7 நாடுகளின் தலைவி என்ற வகையில் பிரித்தானியா மகாராணியார் அதனை முறைப்படி ஆரம்பித்து வைத்தார். உலகில் உள்ள அரச குடும்பங்களில் மிக மிக பழமையான அரச குடும்பம், பிரித்தானியா அரச குடும்பம் ஆகும்.
அத்துடன் உலகில் நீண்ட நாள் மாகாராணியாக இருப்பவரும் எலிசபெத் அவர்கள் தான். அவர் 92 வயதில் கூட சிரித்த முகத்துடன் அனைத்து நாட்டுத் தலைவர்களையும் வரவேற்று. ஒன்றாக உபசரித்து G7 நாடுகளின் நப்பை மேலும் பலப்படுத்தியுள்ளார் பிரித்தானியா மகாராணியார் .
பல உலக நாட்டுத் தலைவர்கள், மகாராணியார் சொல்வதை அனுசரித்துப் போவார்கள், அதோடு மகாராணியார் எந்த ஒரு தலைவரையும் அவமதித்ததும் கிடையாது.
அந்த வகையில் அவருக்கே உரித்தான புன்னகையோடு. கொரோனா கட்டுப்பாடுகளோடு பிரித்தானியாவில் G7 உச்சி மாநாடு ஆரம்பமாகியுள்ளது.



