ரொறன்ரோ மிருகக் காட்சிசாலைலயின் புதுவரவு!

Kamal
Report this article
ரொறன்ரோ மிருகக் காட்சிசாலையில் மிகவும் அரிய வகை சிகப்பு பாண்டா குட்டியொன்று பிறந்துள்ளது.
221 கிராம் எடையுடைய சிகப்பு பாண்டா ஒன்று அண்மையில் மிருகக் காட்சிசாலையில் பிறந்துள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
றொரன்டோ மிருகக் காட்சிசாலை குடும்பத்தின் புது வரவினையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் இதயபூர்வமாக வரவேற்பதாகவும் மிருகக்சாட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நான்கு வயதான பாப்ரிகா என்னும் சிகப்பு பாண்டாவின் முதல் குட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் பிறந்த மூன்றாவது சிகப்பு பாண்டா குட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் புதிய குட்டியை பரிசோதனை செய்வதற்கு பாப்ரிகா இடமளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாண்டா குட்டியை இப்போதைக்கு பொதுமக்கள் பார்வையிட முடியாது எனவும், புதிய குட்டியின் பெயர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.