முடிவிற்கு வந்தது 107 நாள் முடக்கல்நிலை; மகிழ்ச்சியில் சிட்னி மக்கள்!
நான்கு வார கொரோனா முடக்கல் நிலை முடிவிற்கு வந்துள்ளதை சிட்னி மக்கள் கொண்டாடி வருகின்றனர். முடக்கல்நிலை முடிவிற்கு வருவதை குறிக்கும் விதத்தில் நள்ளிரவில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பெருமளவு மக்கள் காணப்பட்டனர்.
இந்நிலையில் கொரோனாவால் வீடுகளுக்குள் முடங்கியிருந்த பலர் தங்கள் உறவினர்கள் குடும்பத்தவர்களின் வீடுகளிற்கு சென்றுள்ளனர். அதோடு லோர்ட் கிளாட்ஸ்டோன் ஹோட்டல் பல நாட்களிற்கு பின்னர் மிகச்சிறந்த வியாபாரம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது.
நாங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளோம் கொவிட்டிற்கு முன்னர் காணப்பட்டதை விட சிறந்த வியாபாரம்இடம்பெற்றுள்ளது என அதன் உரிமையாளர் பட் பிளேக் தெரிவித்ததுடன், மக்கள் மீண்டும் வந்து பியர்அருந்துவதற்கும், இசையை செவிமடுக்கவும் அவர்கள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை 16 வயதிற்கு மேற்பட்டவர்களில் 70 வீதமானவர்களிற்கு இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நியுசவுத்வேல்சின் முடக்கல் நிலை முடிவிற்கு வந்துள்ளது.
16 வயதிற்கு மேற்பட்டவர்களில் 80 வீதமானவர்கள் தடுப்பு_சியைசெலுத்திக்கொண்டதும் மேலும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இவை மிகவும் கடினமான 100 நாட்கள் என நியுசவுத்வேல்சின் புதிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆனால் மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளால் முடக்கல்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது சாத்தியமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய பரவல்கள் குறித்து எச்சரித்துள்ள அவர் சுகாதார சேவையினர் அதனை எதிர்கொள்ள தயாராகிவருகின்றதாகவும் கூறினார்.

