ஒன்ராறியோவின் சில பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஒன்ராறியோவின் சில பகுதிகளில் உறைபனி மழைக்கு வாய்ப்பிருப்பதாக சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒன்ராறியோவின் சில பகுதிகளுக்கான சிறப்பு வானிலை அறிக்கை ஒன்றை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது. அதில், டிம்மின்ஸ் பகுதியிலிருந்து பாரி விரிகுடா வரையிலான ஐந்து பகுதிகளுக்கு உறைபனி மழை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இது, ஒட்டாவாவிற்கு மேற்கே இரண்டு மணிநேரம் பயணத் தொலைவில் அமைந்துள்ளது. மட்டுமின்றி, புதன் மதியம் அல்லது மாலையில் மழையாக மாறுவதற்கு முன்பு பல மணிநேர உறைபனி மழைக்கு சாத்தியமிருப்பதாகவும், வெப்பநிலை உறைபனிக்கு மேல் உயரும் வரையில் நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பிரதான சாலைகள், சாலைகள், நடைபாதைகள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவை பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் மக்கள் கவனமுடன் இயங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உறைபனி மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் வாகனம் செலுத்தும் போதோ அல்லது நடந்து செல்லும்போதோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஒட்டாவா உட்பட வடக்கு மற்றும் தெற்கில் சில பகுதிகளில் உறைபனி மழை பெய்யக் கூடிய சாத்தியமிருப்பதாகவும் சுற்றுச்சூழல் கனடா சிறப்பு வானிலை அறிக்கை வெளியிட்டுள்ளது.