திருமண புகைப்படங்களால் தம்பதிக்கு பெருந்தொகை இழப்பீடு அளிக்க நேர்ந்த புகைப்படக்காரர்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் திருமணம் முடிந்து 6 வருடங்கள் கடந்தும் உரிய தம்பதிக்கு புகைப்படங்களை ஒப்படைக்க தவறிய புகைப்படக்காரருக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது பிரிட்டிஷ் கொலம்பியாவின் Surrey பகுதி நீதிமன்ற நீதிபதி வள்ளியம்மை செட்டியார் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது.
கடந்த 2015 ஜூன் மாதம் கமான் மற்றும் ரமன்தீப் ராய் ஆகிய இருவரும் தங்கள் திருமணத்திற்காக புகைப்படங்கள் மற்றும் காணொளி பதிவிற்காக Elite Images என்ற நிறுவனத்தின் Aman Bal என்பவருடன் 8,500 டொலர் தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
15 முதல் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்ட Aman Bal, ஆனால் திருமணம் முடிந்து 6 வருடங்கள் கடந்தும் கமான் மற்றும் ரமன்தீப் ராய் தம்பதியின் திருமணப்புகைப்படங்களை ஒப்படைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி குறித்த தம்பதியரின் பொக்கிஷமாக பார்க்கப்பட்ட குழந்தை பருவ புகைப்படங்களையும் அவர் கைவசம் வைத்திருந்தார் என்றே தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பலமுறை அவரை தொடர்பு கொண்டும், Aman Bal உரிய பதிலளிக்காமல் தட்டிக்கழித்து வந்துள்ளார்.
இதனையடுத்து நீதிமன்றத்தை நாடியுள்ளது கமான் மற்றும் ரமன்தீப் ராய் தம்பதி. இந்த வழக்கில் Aman Bal தரப்பின் வாதங்களை முற்றாக ஏற்க மறுத்த நீதிபதி செட்டியார், ஆதாரங்கள் அனைத்தும் அவருக்கு எதிராகவே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி Aman Bal ஒப்பந்தத்தை மீறியுள்ளது விசாரணையில் நிரூபணமாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி செட்டியார்,
வழங்கத் தவறிய பொருட்களுக்கு மாற்றாக 7,000 டொலரும், சேதங்களுக்கு 5,000 டொலரும், மன உளைச்சலுக்கு 10,000 டொலர் என மொத்தம் 22,000 டொலர் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மட்டுமின்றி நீதிமன்றக் கட்டணமாக $ 236 செலுத்தவும் நீதிபதி வள்ளியம்மை செட்டியார் உத்தரவிட்டுள்ளார்.