றொரன்டோவில் சினிமா பாணியில் இடம்பெற்ற கொள்ளை!
றொரன்டோவில் பரிசோதகர் என்ற போர்வையில் சினிமா பாணியில் நீண்ட கால பராமரிப்பு நிலையமொன்றிற்குள் பிரவேசித்த பெண் ஒருவர் கடன் மற்றும் பற்று அட்டைகளை களாவடிச் சென்றுள்ளார்.
நீண்ட கால பாராமரிப்பு நிலையத்தில் தங்கியிருப்போர் மற்றும் உத்தியோகத்தர்களின் கடன், பற்று அட்டைகள் களாவடப்பட்டுள்ளது.
நோர்த் யோர்க் பகுதியில் அமைந்துள்ள நீண்ட கால பராமரிப்பு நிலையமொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
நீண்ட கால பராமரிப்பு நிலையத்தின் பரிசோதகர் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட பெண், பராமரிப்பு நிலையத்தினை பரிசோதனையிடும் போர்வையில் இந்த குற்றச் செயலை மேற்கொண்டுள்ளார்.
களவாடப்பட்ட கடன் மற்றும் பற்று அட்டைகளைக் கொண்டு குறித்த பெண் பல்வேறு கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண்ணின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன் இவர் தொடர்பான தகவல்கள் இருந்தால் 416-808-3100 என்ற எண்ணுக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.