சிறார்கள் புதைக்கப்பட்ட பள்ளி மீது இனி கனேடிய விமானங்கள் பறக்காது
பிரிட்டிஷ் கொலம்பியாவில் 215 சிறார்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி மீது இனி கனேடிய விமானங்கள் பறக்காது என பெடரல் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கம்லூப்ஸ் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் இந்திய உண்டுறை பள்ளியில் இருந்து 215 சிறார்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கனடா மொத்தமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த சிறார்கள் தொடர்பில் அடையாளம் காணும் பணியும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் போதிய ஆவணங்கள் இல்லை என்பதால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கம்லூப்ஸ் பள்ளி அமைந்துள்ள பகுதியில் இனி விமானங்கள் பறப்பதை கட்டுப்படுத்தப்படும் என பெடரல் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்த கொடிய நிகழ்வில் இருந்து தப்பியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு செய்யும் எளிய மரியாதை மட்டுமே என அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, பூர்வக்குடி மக்களுடன் இனி அதிகமாக இணைந்து செயல்பட இருப்பதாகவும், அவர்களின் இந்த துயர நாட்களை மதிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபை இந்த விவகாரத்தில் இன்னும் மன்னிப்பு கோராமல் இருப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.