யாழ் பலகலைகழகத்தில் இன்று காலை நினைவுத்தூபிக்கான அடிக்கல் ; துணைவேந்தர் வாக்குறுதி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைக் கட்டுவதற்குத் துணைவேந்தர் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும், இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தும் மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதிக்க வேண்டும்.பல்கலைக்கழக வளாகத்தை விட்டு பொலிஸார் விலக வேண்டும் என இரு கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு வெளிப்புறத்தில் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை,மாணவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளதன் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய குழுவொன்று குறித்த இடத்திற்கு விரைந்து மாணவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முற்பட்டபோது மாணவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் வைத்திய குழு வெளியேறியது.