கியூபெக்கில் இடம்பெற்ற கோர விபத்து
கனடாவின் கியூபிக் மாகாணத்தில் இடம் பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கட்டுமான தளமொன்றில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து பாஸ் சென் லாவுரான்ட் என்னும் இடத்தில் இடம் பெற்றுள்ளது.
சிசர் லிப்ட் எனப்படும் ஓர் பழுதூக்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான்கு பணியாளர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
திடீரென குறித்த பழுது தூக்கி கவிழ்ந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தினால் நான்கு பேர் உயிரிழந்து விட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும் விசாரணைகள் முன்னணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
53 வயதான பெண் ஒருவரும் 27 வயதான ஆண் ஒருவரும் 24 வயதான பெண் ஒருவரும் 60 வயதான ஆண் ஒருவரும் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்