கனடாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்; பரிதாபமாக உயிரிழந்த நான்கு மாணவர்கள்!
கனடாவில் உள்ள ராணுவ கல்லூரி ஒன்றின் 4 மாணவர்கள் காருடன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றாரியோ, கிங்ஸ்டனில் உள்ள ராயல் ராணுவ கல்லூரி வளாகத்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை இச்சம்பவம் குறித்து கனடாவின் தேசிய விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருவதாக கனேடிய தேசிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் ஜாக் ஹோகார்ட், ஆண்ட்ரே ஹோன்சியூ, ப்ரோடன் மர்பி மற்றும் ஆண்ட்ரேஸ் சலேக் ஆகிய 4 ராணுவயிற்சி மாணவ அதிகாரிகள் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் பயணித்த கார், கல்லூரில் வளாகத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கியதில் 4 பேரும் உயிரிழந்ததாக கல்லூரி பயிற்சி தளபதி ஜோசி கர்ட்ஸ் கூறினார்.
My heart breaks for the families and friends of the four officer cadets who lost their lives early this morning in Kingston. The tragic passing of these young Canadians is a devastating loss. To all who knew them: We’re here for you.
— Justin Trudeau (@JustinTrudeau) April 29, 2022
இந்நிலையில் கிங்ஸ்டனில் இன்று அதிகாலை உயிரிழந்த நான்கு கேடட் அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக எனது இதயம் உடைகிறது" என பிரதமர் ட்ரூடோ ட்விட்டரில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த நான்கு மாணவர்களும் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டிருந்தனர். ஹோகார்ட் மற்றும் சலேக் ஆகியோர் இராணுவ மற்றும் மூலோபாய ஆய்வுகளைப் படித்துக்கொண்டிருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் Honciu வணிக நிர்வாகம் படித்து ஒரு தளவாட அதிகாரி ஆனார். மர்பி, ராயல் கனடிய விமானப்படையில் விண்வெளி சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டாளராக ஆவதற்கு வணிக நிர்வாகத்தில் நிபுணத்துவம் பெற்றவர் எனவுஇம் கூறப்படுகின்றது.
