கனடாவில் தமிழ் குடும்பம் ஒன்றின் பாரிய மோசடி அம்பலம்!
கனடா டொராண்டோவை சேர்ந்த தமிழ் குடும்பத்தின் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி மோசடி செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த தமிழ் குடும்பத்தின் மீது ரோயல் கனடியன் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர கனேடிய வணிகங்களுக்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்பட்ட நிதி உதவி திட்டத்தின் ஊடாக தமிழர்கள் குழுவினால் நிதி மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனேடியர்களுக்கு வழங்கப்பட்ட இந்த உதவி தொகையை பலரின் பெயர்களில் மோசடியான முறையில் பெறுவதற்காக இந்த தமிழர்கள் முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்காக பாரிய அளவிலான மோசடி ஆவணங்களை கொண்டு உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ளதாக விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர்களினால் 5,000 டொலருக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிவந்துள்ள நிலையில் அவர்கள்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.