உக்ரைனில் ரஷ்ய கூலிப்படையினரின் வெறியாட்டம்!
உக்ரைனுக்குள் ரஷ்யப் படையினருடன் புட்டின் ஆதரவு கூலிப்படையினரும் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகி நிலையில், தற்போது அவர்கள் வீடு வீடாகச் சென்று தாக்குதல் நடத்தும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
Wagner Group என்று அழைக்கப்படும் இந்த கூலிப்படையினர் டான்பாஸ் பகுதியிலுள்ள Popansa என்ற இடத்தில், உக்ரைன் படையினர் தங்கியிருக்கும் ஒரு வீட்டிற்குள் கையெறிகுண்டு ஒன்றை வீசும் காணொளி காட்சி வெளியாகியுள்ளது.
அந்த பகுதியில் முழுமையாக வீடுகளே இல்லாத நிலையில், மிச்சமிருக்கும் ஒரு வீட்டைக் கூட விடாமல் தாக்கியழிப்பதாக கூறப்படுகின்றது.
அதாவது, உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் ஏமாற்றமே மிஞ்சியதால், மே 9ஆம் திகதி ரஷ்ய வெற்றி விழாக் கொண்டாட்டங்களுக்கு முன், உக்ரைனின் கிழக்குப் பகுதியாகிய டான்பாஸ் பகுதியை எப்படியாவது முழுமையாகக் கைப்பற்றிவிட ரஷ்யா தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையில், ரஷ்யப் படைகள் டான்பாஸ் பகுதியில் முன்னேற இயலாமல் தடுமாறி வருவதாக பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நேரடியாக ஜெயிக்க முடியாத ரஷ்யப்படையினர், கூலிப் படையினருடன் இணைந்து வீடு வீடாகச் சென்று தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.