கனடாவில் கொல்லப்பட்ட இஸ்லாமியர் குடும்பத்தினருக்கு இன்று இறுதிச்சடங்கு
கனடாவில் இளைஞர் ஒருவரால் கொல்லப்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் நால்வருக்கு இன்று இறுதிச்சடங்கு முன்னெடுக்கப்பட உள்ளது.
கனடா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நால்வர் கொலை தொடர்பில் நாட்டின் பல பகுதிகளில் அஞ்சலி கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
லண்டன் மசூதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த அஞ்சலி கூட்டத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இன்று மதியம் 1.30 மணியளவில் லண்டனில் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை லண்டன் மசூதி இமாம் ஆரிஜ் அன்வர் தெரியப்படுத்தியுள்ளார்.
பொதுமக்களுக்கான ஒரு அஞ்சலி கூட்டத்திற்கு பிறகு, தனிப்பட்ட முறையில் உடல் அடக்கம் செய்யப்படும் என்றே தெரிவித்துள்ளனர். சடங்குகளுக்கு இமாம் அன்வர் தலைமை தாங்குவார் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பாக அறிக்கை ஒன்றும் வாசிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
மேலும் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் இஸ்லாமியர்களுக்கான கல்லறையில் அடக்கம் செய்யப்பட உள்ளனர்.
மதியம் 1 மணிக்கு ஊர்வலம் ஒன்றும் நடத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்களுக்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இறுதிச்சடங்கில் பங்கேற்கும் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் எனவும், மாஸ்க் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.