விளையாட்டு வினையானது; நேரலையில் வோட்கா குடித்தவருக்கு நேர்ந்த துயரம்
ரஷ்யாவில் நேரலையில் வோட்கா குடித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டை சேர்ந்த 60 வயதான யுரி டியுசெகின், அந்நாட்டு மக்களால், கிராண்ட் பாதர் என்ற புனைபெயரோடு அழைக்கப்பட்டு வருகிறார்.
இவர் அங்குள்ள மீடியாக்களால் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டு வரும் Thrash streaming நிகழ்ச்சியான யூடியூப் நேரலையில், அதிகப்படியான மதுவகைகள் அல்லது ஸ்பைஸி சாஸ் குடிக்க வேண்டும் என்ற போட்டிக்கு ஒப்புக்கொண்டார்.
இந்நேரலை நிகழ்ச்சியில், அவர் 1.5 லிட்டர் வோட்கா குடித்த நிலையில், அந்நிகழ்ச்சியிலேயே மரணம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, அந்நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டது. போலீசார், இந்நிகழ்ச்சியை நடத்திய நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யுரி டியுசெகினின் மரணம் குறித்த காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும், பிரேதப் பரிசோதனைக்குப்பிறகே,மரணத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு, பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை ஒளிபரப்பும், மீடியாக்களின் அனுமதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
Thrash streaming நிகழ்ச்சிகள், சட்டவிரோதம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விரைவில் புதிய ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தகவல் கொள்கை ஆணையத்தின் தலைவர் அலெக்ஸி போஸ்கோவ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
இன்டர்நெட் வழியாக பணம் திரட்டும் நடவடிக்கையாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இது சட்டவிரோதம் என விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இதுகுறித்து ஆலோசிப்பதற்காக 11 ஆம் திகதி இந்த ஆணைய உறுப்பினர்கள் கூடி, முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.