புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிய ஜனாதிபதி!
ஜெர்மனி ஜானதிபதி ஒலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) புத்தாண்டையொட்டி தனது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை உரையை ஆற்றியுள்ளார்.
குறித்த உரையில்,
பல துன்பங்கள்; பெரும் ரத்த சேதம். மின்னல் வேகத்தில் நமது உலகம் முன்பை விட வாழ்வதற்கு கடுமையான இடமாக மாறி விட்டது.
ரஷ்யா - உக்ரைன் போர், அதிகரிக்கும் எரிபொருள் விலை, ரஷ்யாவினால் ஏற்படுத்தப்பட்ட எரிவாயு தடை, இஸ்ரேல் - ஹமாஸ் போர் உள்ளிட்ட பல கவலையளிக்கும் நிகழ்வுகள். ஆனால், ஜெர்மனியர்களான நாம் அனைத்தையும் வெற்றிகரமாக கடந்து விடுவோம்.
இதேவேளை நாட்டில் விலைவாசி குறைந்துள்ளது. ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உயர்ந்துள்ளது. எரிபொருள் தேவையான அளவு கையிருப்பு உள்ளது. மக்கள் மேல் வரிவிதிப்பு குறைந்துள்ளது.
போக்குவரத்திலும், பசுமை எரிசக்தியிலும் அரசு முதலீடு செய்து வருகிறது.
இந்நிலையில், நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல மக்கள் அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும்.
ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் மக்கள் நம்மிடம் அதை எதிர்பார்க்கிறார்கள். எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வையுங்கள் என ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோலஸ் கூறியுள்ளார்.