பெரும் தட்டுப்பாடு; ஜேர்மன் உணவகங்கள் அதிரடி நடவடிக்கை!
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நாடுகளில் சமையல் எண்ணெய்க்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சூரியகாந்தி எண்ணெய் பற்றாக்குறையால் பிரஞ்சு ப்ரைஸ் எனப்படும் கிழங்கு பொரியல் சமையல் மெனுவில் இருந்து நீக்கப்படுவதாக ஜெர்மனி உணவகங்கள் அறிவித்துள்ளது.
இது குறித்து , ஜெர்மனி மெக்டொனால் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிறுவனம் வறுக்கப் பயன்படுத்தும் எண்ணெய் கலவையில் சூரியகாந்தி எண்ணெயின் அளவைக் குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேசமயம் ஜெர்மன் பல்பொருள் அங்காடிகளில் சூரியகாந்தி எண்ணெய் பாட்டில்கள் பல வாரங்களாக கையிருப்பில் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதால் உணவகங்கள் மீண்டும் மீண்டும் அதே எண்ணெயில் பொரிப்பதால் கொலஸ்ரோல் பாதிப்பு ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , முடிந்த அளவு அவ்வாறான பொரித்த உணவுகளை தவிர்க்குமாறு பொது மக்களிடம் உணவு பாதுகாப்பு பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பல ஐரோப்பிய நாடுகள் சூரியகாந்தி எண்ணெய் பற்றாக்குறையால் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர் .