கிரீஸ் நாட்டில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஜூன் 14 ஆம் திகதி வரை தடை
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கிரீஸ் நாட்டுக்கு வெளிநாட்டினர் வருவதற்கான தடையை வருகிற 14 ஆம் திகதி வரை நீட்டித்து அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை மிகத் தீவிரமாக அதிகரித்தது. இந்த சூழலில் பல்வேறு நாடுகளில் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கிரீஸ் நாட்டுக்கு வெளிநாட்டினர் வருவதற்கான தடையை வருகிற ஜூன் 14ஆம் திகதி வரை நீட்டித்து அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
கீரீஸ் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 409,368 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் 20,809 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் தற்போது வரை 12,899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.