வான்வெளியை மூடிய வளைகுடா நாடுகள் ; பல விமானங்கள் இரத்து
ஈரான் தாக்குதல் எதிரொலியால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் 11 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், லெபனான், ஈராக், கட்டார், குவைத், சவுதி அரேபியா, ஜோர்தான், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன.
விமானங்கள் இரத்து
இதனால், தோஹா, அபுதாபி, குவைத், டுபாய் நாடுகளுக்கு செல்லும் 6 விமானங்களும், அங்கிருந்து சென்னைக்குச் செல்லும் 5 விமானங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
தாய்லாந்திலிருந்து கட்டார் தலைநகர் தோஹா சென்ற 3 கட்டார் எயார்லைன்ஸ் விமானங்கள் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டன.
இதேவேளை இந்தியாவில் இன்று லண்டன், பஹ்ரைன், அபுதாபி செல்லும் விமானங்கள் அனைத்தும் தாமதமாக இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.