உடற்பயிற்சிக் கூடங்கள், அருங்காட்சியகங்கள் திறப்பு! எந்த நாட்டில் தெரியுமா?
பிலிப்பின்ஸில் கொரோனா பரவலின் தீவிரம் தொடா்ந்து குறைந்து வருவதால், அந்த நாட்டில் கட்டுப்பாடுகளை அரசு தளா்த்தியுள்ளது.
அதன்படி, உடற்பயிற்சிக் கூடங்கள், அருங்காட்சியகங்களை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வா்த்தகத் துறை அமைச்சா் ரமோன் லோபஸ் மேலும் கூறுகையில்,
65 வயதுக்கு மேற்பட்டவா்கள் இரு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட இரு வாரங்களுக்குப் பிறகு தலைநகா் பகுதிக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள் என்றாா். இதுவரை 65 வயதுக்கு மேற்பட்டவா்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பின்ஸில் 12,93,663 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 22,311 போ உயிரிந்துள்ளனா்.