எச்-1பி விசா கட்டணம்; ட்ரம்ப்பிற்கு சிக்கல்
எச்-1பி விசா கட்டணத்தை உயர்த்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து கலிபோர்னியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எச்-1பி விசா மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
65 ஆயிரம் விசா
இந்த விசாவை பயன்படுத்தி 3 ஆண்டுகளுக்கு அங்கு தங்கி புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரியலாம். தேவைப்பட்டால் அதனை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடிக்க முடியும்.
அதன்படி தொழில்நுட்ப நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் என 65 ஆயிரம் விசாக்களை அரசாங்கம் வழங்கி வந்தது. அதேபோல் அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் படித்த 20 ஆயிரம் பேருக்கும் எச்-1பி விசா வழங்கப்பட்டது.
எனவே சுமார் 13 லட்சம் வெளிநாட்டினர் எச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எச்-1பி விசா கட்டணத்தை 1 இலட்சம் அமெரிக்க டொலராக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உயர்த்தினார்.
அவரது இந்த அறிவிப்பு அங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.