அமெரிக்க மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய H5 வைரஸ்!
2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து பரவி வரும் H5N1 இன்ஃப்ளூயன்ஸா (பறவைக் காய்ச்சல்) வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் மனித நோய்த்தொற்று, அமெரிக்காவில் முதன் முறையாக கணடறியப்பட்டுள்ளமை அதிர்ர்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முதல் முறையாக H5 எனும் வைரஸ் தாக்கியவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
H5 வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு கூடுதல் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நபர் குணமடையும் வரை அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என கூறியுள்ளது.
அதோடு பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி அந்த வைரஸ்க்கு எதிர்ப்பு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு நபருக்கு H5 வைரஸ் பரவியுள்ள தகவல் அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.