செல்லமாக வளர்த்த நாயால் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட சோகமான முடிவு
இளம்பெண் தனது வளர்ப்பு நாயால் கடிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனில் உள்ள Brimingham ஐ சேர்ந்த Keira Ladlow என்ற இளம்பெண் நேற்று முன்தினம் தனது வீட்டில் தான் ஆசையாக வளர்த்த நாய் கடித்ததில் படுகாயமடைந்து உயிரிழந்துளார்.
இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததுள்ளனர். Kiera Ladlow உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் ஆசையாக வளர்த்த நாயே அவரை கடித்து காயப்படுத்தியதால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து Kiera வின் உறவினர் Abeygail Barrett தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 'Kiera ஏற்கனவே வளர்த்த நாய் புற்றுநோயால் இறந்ததாகவும், இந்த நாயை தோட்டத்தில் கண்டெடுத்து வளர்த்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் நாய்கள் நல்ல நோக்கங்களுடன் சில நேரங்களில் இருக்கும் .ஆனால் அவற்றின் கடந்த காலம் சோகத்தில் இருப்பதால் சரியாக கணிக்க முடியாததாக ஆக்குகிறதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவத்தை பற்றி போலீசார் கூறுகையில் இந்த மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை Kiera வின் மரணம் சோகமான சம்பவம் என தெரிவித்துள்ளார்கள்