காரில் இருந்து விழுந்த தலையில்லாத உடல்...ரஷ்யாவில் இடம்பெற்ற பரபரப்பு சம்பவம்
ரஷ்யாவில் வேகமாக சென்ற சார் ஒன்றில் இருந்து தலையில்லாத உடல் ஒன்று வீதியில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Yegor Komarov (23) என்ற நபரும், மேலும் இரண்டு ஆண்களும் ஓட்டி வந்த காரிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது அதனையடுத்து இறங்கி காட்டுப்பகுதிக்குள் ஓடியுள்ளார்கள். தலையில்லாமல் வீதியில் விழுந்த உடலானது பீட்டர்ஸ்பர்க்கைச் சேர்ந்த 50 வயது தொழில் அதிபருடையது என தெரியவந்துள்ளது.
குறித்த தொழில் அதிபருக்கும் மற்ற மூவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதகவும் அதன் பின்பு அவரது உடலை புதைக்க திட்டமிட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட Yegor, தனக்கு கொலை செய்வதென்றால் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.
அத்துடன், நரமாமிசத்தை ருசி பார்ப்பதற்காக, செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள ஒரு பூங்காவில் வைத்து, ஒரு 38 வயது நபரை தான் கத்தியால் குத்திக் கொன்றதாகவும், அவரது மாமிசத்தையும் இரத்தத்தையும் தான் ருசி பார்த்ததாகவும், அவரது நாக்கை வெட்டி வெண்ணெயில் பொறித்து சாப்பிட்டுப் பார்த்ததாகவும், அது தனக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு விலங்கினை இறுக்கமாக அணியுமாறும் இல்லையென்றால் அத்தனையும் கடித்து தின்றுவிட்டேன் என்றும் அவர் கூறியது பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.