பிரான்ஸில் கொட்டித்தீர்த்த கனமழை ; நாடாளுமன்றத்தில் நீர் கசிந்ததால் பரபரப்பு
பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் பாராளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மழைநீர் கசிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் பாராளுமன்றத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது சபையில் பிரதமர் பிரான்கோயிஸ் பெய்ரு உரையாற்றி கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் சபையின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிவதை அங்குள்ள ஊழியர்களிடம் சுட்டிக்காட்டினார். இதையடுத்து பாராளுமன்ற பிரதி தலைவர் சபையை சிறிது நேரம் ஒத்திவைத்தார்.
சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு சபை மீண்டும் கூடியது. மழைநீர் கசியாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது