ரஷ்யா தாக்குதலில் கொல்லப்பட்ட உக்ரைனின் ஹீரோ!
போர் விமானியான ஸ்டீபன் தாராபால்கா(Stephen Tarapalka) தன்னுடைய போர் திறமைக்காக ‘கீவ் நகரின் சாத்தான்’ என்றழைக்கப்பட்டவர்.
உக்ரைன் ராணுவ மேஜர் ஸ்டீபன் தாராபால்கா(Stephen Tarapalka) , ரஷ்யாவுடனான போரில் மகாபாரதத்தில் அபிமன்யுவை போல வீர சாகசம் காட்டியவர்.
போரின் முதல் நாளில்,ரஷ்யாவின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியவர். போர் விமானியான ஸ்டீபன் தாராபால்கா(Stephen Tarapalka) தன்னுடைய போர் திறமைக்காக ‘கீவ் நகரின் சாத்தான்’ என்றழைக்கப்பட்டவர்.
இதன் காரணமாக அவர் உலக புகழ் பெற்றார். இந்நிலையில், 29 வயதான மேஜர் ஸ்டீபன் தாராபால்கா(Stephen Tarapalka) , இப்போது நடைபெற்று வரும் கடும் சண்டையில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுடனான போரில் இதுவரை 40 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியவர்.மேஜர் தாராபால்கா(Stephen Tarapalka) , மேற்கு உக்ரைனின் ஒரு சிறிய கிராமத்தில் தொழிலாள வர்க்க குடும்பத்தில் பிறந்தார்.
சிறுவயதில் இருந்தே விமானி ஆக வேண்டும் என்று விரும்பினார். போர் விமானியான ஸ்டீபன் தாராபால்கா வீரமரணத்திற்குப் பின், உக்ரைனின் உயரிய விருது ‘வீரத்திற்கான சிறந்த பதக்கம்’ வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ‘உக்ரைனின் ஹீரோ’ என்ற பட்டமும் வழங்கப்பட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர் என்று சர்வதேச செய்தி வெளியிட்டுள்ளது.
அவருடைய வீரமரணத்தை தொடர்ந்து, தற்போது அவரது ஹெல்மெட் மற்றும் கண்ணாடிகள் லண்டனில் ஏலம் விடப்பட உள்ளன. போர் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், மிக்-29 போர் விமானத்தில் பெருமளவிலான எதிரிகளுக்கு மத்தியில் அவர் சண்டையில் ஈடுபட்டிருந்த போது, மார்ச் 13ஆம் திகதியன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவரது துணிச்சல் உக்ரேனிய படைகளுக்கு ஒரு பெரிய மன உறுதியை அளித்தது. தன்னுடைய தாய்நாட்டுக்காக, அதன் மக்களுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த மேஜர் ஸ்டீபன் தாராபால்காவின் (Stephen Tarapalka) வீரமரணம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
எங்களுடைய மகன் மரணமடைந்ததை பற்றி உக்ரேனிய ராணுவம் எங்களிடம் எந்த தகவலும் கொடுக்கவில்லை என்று அவருடைய பெற்றோர் கூறியதாக தெரியவந்துள்ளது.
“அவர் ஒரு ராணுவ பணியின் காரணமாக, போர் விமானத்தில் பறந்து கொண்டிருந்தார் என்பது மட்டுமே எங்களுக்குத் தெரியும், மேலும் அவர் தனது பணியை முடித்துவிட்டார், ஆனால், அதன்பின்னர் அவர் திரும்பவில்லை. எங்களிடம் உள்ள தகவல்கள் அவ்வளவுதான்” என்று வருடைய பெற்றோர் கூறினர்.
