தீபாவளிக்கு விடுமுறை வேண்டும்: கனடாவில் கோரிக்கை வைத்த மாணவன்
CBE பள்ளிகளுக்கு தீபாவளி மற்றும் ஹோலியை பாரம்பரிய விடுமுறையாக அறிவிக்குமாறு கல்கரி ஜூனியர் உயர்நிலை மாணவர் ஒருவர் கல்கரி கல்வி வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
கல்கரியில் ஃபேர்வியூ பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவரான 13 வயது புஜீத் கர்க் என்பவரே குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் CBE அறங்காவலர்களுக்கு கடிதம் ஒன்றையும் கர்க் அனுப்பியுள்ளார்.
அதில், ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகையின்போது விடுமுறை அளிப்பது மாணவர்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், தெற்காசிய கலாச்சாரத்தை கொண்டாடுவது என்பது, கனடா முழுவதும் பன்முக கலாச்சாரத்தின் கலங்கரை விளக்கமாக இது அமையும் எனவும் கர்க் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, தீபாவளி நாளில் விடுமுறை இல்லாமல் பள்ளியில் அமர்ந்திருப்பது என்பது இந்து மாணவர்களுக்கு கடுமையான ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமது வகுப்பில் இணைந்துள்ள 27 மாணவர்களில் 10 பேர் இந்துக்கள் எனவும், தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபடாமல் பள்ளியில் கவனம் செலுத்துவது முடியாத செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.