வெயிலை பயன்படுத்திக்கொண்டு பணம் பார்க்கும் மொன்றியல்வாசிகள்: எச்சரிக்கும் நிபுணர்கள்
கனடாவில் வெயில் வாட்டி வதைக்கிறது. எந்த அளவுக்கு என்றால், காட்டுத்தீ பரவும் அளவுக்கு பயங்கரமாக வெயில் அடிக்கிறது. மக்கள் உஷ்ணத்தை தணிக்க என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்கள்.
இதை பயன்படுத்திக்கொண்டு மொன்றியல்வாசிகள் பணம் பார்க்கத் தொடங்கியுள்ளார்கள். ஆம், தங்கள் வீடுகளில் நீச்சல் குளம் வைத்திருப்போர் அதை வாடகைக்கு விட்டு பணம் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
வெயிலால் அவதியுறுபவர்களுக்கு நீச்சல் குளத்தில் குளித்தது போலவும் ஆயிற்று, நீச்சல் குளத்தின் சொந்தக்காரருக்கு பணம் கிடைத்தது போலவும் ஆயிற்று. ஆனால், காப்பீட்டு நிறுவனத்தோர், அப்படி நீச்சல் குளத்தை வாடகைக்கு விட்டால், அது வீடாக கருதப்படாமல் தொழிலாக கருதப்படும், பிரச்சினைகள் ஏற்பட்டால் சிக்கல் ஏற்படலாம் என்கிறார்கள்.
அத்துடன், நீச்சல் குளத்தில் விபத்து ஏற்பட்டால், அதனால் அதை வாடகைக்கு விட்ட வீட்டு உரிமையாளருக்கு சிக்கல் ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள். என்றாலும், வீட்டு உரிமையாளர்கள் பணம் பார்க்க முடிவு செய்துவிட்டார்கள்.
அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம், நாங்கள் கண்காணித்துக்கொள்கிறோம் என்கிறார் Holly Lawson.
அவர் ஒருமணி நேரத்துக்கு 35 டொலர் வசூலிக்க முடிவு செய்திருக்கிறார். சிலர் 45 டொலர் வரை வாங்குகிறார்கள்.