வெள்ள அபாயம்... பல வீடுகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும்: கனேடிய நகர மேயர் வெளிப்படை
பிரிட்டிஷ் கொலம்பியாவில் Sumas Prairie பகுதி விளைநிலங்களை காப்பாற்ற அணையை பலப்படுத்த வேண்டும் என நகர மேயர் தெரிவித்துள்ளார்.
Sumas Prairie பகுதி மீண்டும் ஏரியாக மாறாமல் இருக்க, பல வீடுகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நெருக்கடியான சூழல் தொடர்பில் பேசிய மேயர் ஹென்றி பிரவுன், விளைநிலங்களை இதுவரை பாதுகாத்துவந்த அணையில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார். இதனால் மிக விரைவாக அதற்கான கரை ஒன்றை எழுப்புவது அவசரத் தேவையாக உள்ளது என்றார்.
மேலும், தோராயமாக 100 மீற்றர் நீளம் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் மேயர் பிரவுன் குறிப்பிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை காலை தொடங்கி பிரதான சாலை 1-ஐ ஒட்டி இரண்டரை கிலோமீற்றர் நீளமுள்ள தடுப்புச் சுவரை உருவாக்க வேண்டும் எனவும் பிரவுன் தெரிவித்துள்ளார்.
இந்த கட்டுமானப்பணிகளுக்காக 6ல் இருந்து 12 வீடுகள் வரையில் இடிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Sumas Prairie என்பது அபோட்ஸ்போர்டின் தென்கிழக்கில் 90-சதுர கிலோமீற்றர் தாழ்வான விவசாயப் பகுதியாகும்.
இதில் மூன்றில் இரண்டு பகுதி நிலம் Sumas ஏரியாக இருந்தது என்றார் மேயர் பிரவுன்.
சுமாஸ் பகுதியின் மேற்கில் சிலர் தண்ணீர் வடிவதைக் கண்டு வருவதாக கூறியுள்ளனர். அதற்குக் காரணம், நீர் மேற்கிலிருந்து கிழக்கே, ஏரிப் படுகையை நோக்கிப் பாய்வதால்தான் என்றார் மேயர் பிரவுன்.