சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம்: ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்
ரொறன்ரோவில் சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பெண் உட்பட மூவர் கைதாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு கட்ட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த பொலிசார், திங்களன்று 37 வயது பெண் ஒருவரை இந்த வழக்கு தொடர்பில் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், 35 மற்றும் 57 வயதுடைய இரு ஆண்கள் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை, ரொறன்ரோ Stockyards பகுதியில் குப்பைத்தொட்டி அருகில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதைக் கண்ட மெக்கானிக் ஒருவர், அதைத் திறந்து பார்த்திருக்கிறார்.
திறந்து பார்த்த அவருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த சூட்கேஸுக்குள் பெண் ஒருவரின் சடலம் இருந்துள்ளது. உடனடியாக அவர் பொலிசாருக்கு தகவலளிக்க, விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் Varsha Gajula (41) என தெரியவந்துள்ளது.
Caledon பகுதியைச் சேர்ந்த அவர் ஒரு இந்தியர் என கூறப்படுகிறது. நடந்தது கொலை என கருதி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல் தெரிய வரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.