கனடாவில் மானை கொன்ற ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனை
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் சட்டவிரோதமான முறையில் மானை கொன்ற நபர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு 4500 டொலர் அபராதம் மற்றும் வேட்டையாடும் உரிமை நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக வேட்டையாடி பின்னர் மானை விட்டுவிட்டதற்காக, ஸ்டர்ஜென் பால்ஸ் Sturgeon Falls நகரைச் சேர்ந்த ரொபர்ட் திபெல்ட் Robert Thibeault என்பவருக்கு கடுமையான அபராதமும் வேட்டையாடும் உரிமை இடைநீக்கமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 2023 அக்டோபரில், ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாண எல்லைக்கு அருகிலுள்ள ஸ்டெர்ஜென் Sargeant நகரப் பகுதியில் இடம்பெற்றது.
அனாமதேய தகவல் ஒன்றைத் தொடர்ந்து, Ontario இயற்கை வள அமைச்சின் பாதுகாப்பு அலுவலர்கள் (Conservation Officers) சம்பவ இடத்துக்கு சென்று, கொல்லப்பட்டு விட்டுவைக்கப்பட்ட ஒரு பெண் மானை கண்டுபிடித்தனர்.