அடக்கம் செய்யப்பட்டு 4 நாட்கள் கழித்து உயிருடன் வந்த கணவன்! அதிர்ச்சியில் உறைந்துபோன மனைவி

Wife frozen in shock 4 days after burial Husband who came alive
By Vasanth Jan 14, 2021 07:05 AM GMT
Vasanth

Vasanth

Report

கொரோனாவால் உயிரிழந்தது தனது கணவர்தான் என நினைத்து வேறு ஒருவரது உடலை வாங்கிச்சென்ற பெண் அந்த உடலை அடக்கம் செய்துள்ளார். ஆனால். 4 நாட்கள் கழித்து அந்த பெண்ணின் கணவர் உயிருடன் வந்து அதிர்ச்சி அளித்தார்.

கொரோனாவால் உயிரிழந்த வேறு ஒரு நபரை தனது கணவர் என நினைத்த பெண் உயிரிழந்த நபரின் உடலை அடக்கம் செய்துள்ளார். ஆனால், தனது கணவன் சில நாட்கள் கழித்து உயிருடன் வந்ததால் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டில் நடைபெற்றுள்ளது.

ஹோண்டுராஸ் நாட்டின் எல் கார்மென் பகுதியை சேர்ந்த தம்பதியர் ஜூலியோ(65) மற்றும் விக்டோரியா. கணவன் மனைவியான இவர்கள் கார்மென் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 25-ம் தேதியில் ஜூலியோ தனது வீட்டில் இருந்து வழக்கமான நடைபயணத்திற்கு சென்றுள்ளார்.

இவர் தான் வசித்த பகுதியில் அருகே அமைந்துள்ள மாநகராட்சி பகுதியான திரினிடேட் என்ற இடத்தில் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக காட்டுப்பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஜூலியோ விழுந்ததால் அவருக்கு என்ன ஆனது என யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனால், அவர் இன்று வீட்டிற்கு வரவில்லை. நடைபயணமாக சென்ற தனது கணவர் வராததால் சந்தேகமடைந்த மனைவி விக்டோரியா போலீசில் புகார் அளித்துள்ளார்.

போலீசாரும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், கடந்த 30-ம் தேதி எல் கார்மென் பகுதியில் உள்ள மருத்துவமனையில் விக்டோரியாவுக்கு இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் உங்களது கணவராக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்த நபரை அடையாளம் காண நீங்கள் வர வேண்டும் என விக்டோரியாவுக்கு மருத்துவமனை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வரும்போது கணவரின் அடையாள சான்றிதழை கொண்டு வரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த விக்டோரியா தனது கணவரின் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு பிணவறையில் இருந்த முதியவர் உடலை மருத்துவ ஊழியர்கள் காண்பித்து இது உங்கள் கணவரா என அடையாள காட்டுங்கள் என கேட்டுள்ளனர். அந்த உயிரிழந்த நபரை பார்த்த விக்டோரியா இவர் தனது கணவர் ஜூலியோ தான் என கூறியுள்ளார். இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த அந்த நபரின் உடலை விக்டோரியாவிடம் மருத்துவ ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

உயிரிழந்தவர் தனது கணவர்தான் என நினைத்துக்கொண்ட விக்டோரியா அந்த உடலை பெற்றுக்கொண்டு தனது சொந்த ஊரில் அடக்கம் செய்தார். அந்த நபரை அடக்கம் செய்யும் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்றபோது விக்டோரியாவின் மகன் ஒருவர் இது நமது தந்தை தான என சந்தேகம் உள்ளது என கேட்டுள்ளார்.

ஆனால், அதை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. இறுதியாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபரை விக்டோரியா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில், திரினிடேட் மாநகராட்சி பகுதியில் மயங்கி விழுந்த ஜூலியோவை அவ்வழியாக சென்ற சிலர் கண்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் ஒரளவு நினைவு திரும்பியதையடுத்து தனது வீடு எங்கு உள்ளது என்ற தகவலை ஜூலியோ தெரிவித்துள்ளார்.

ஜூலியோவின் வீடு உள்ள இடம் குறித்து தகவலறிந்த மருத்துவ ஊழியர்கள் அவரது உடல்நலம் சற்றும் முன்னேறிய பின்னர் அவரது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அதாவது, தனது கணவர் இறந்து என்று கடந்த 30-ம் தேதி வேறு ஒரு நபரை விக்டோரியா அடக்கம் செய்ததில் இருந்து 4 நாட்கள் கழித்து ஜனவரி 3-ம் தேதி ஜூலியோ வீட்டிற்கு வந்தார்.

கார் ஒன்று தனது வீட்டின் முன் நிற்பதை கவனித்த விக்டோரியா வெளியே வந்தார். அங்கு உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த தனது கணவர் ஜூலியோ உயிருடன் இருந்ததை கண்டு விக்டோரியா அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் நடந்த விவகரத்தை மருத்துவ ஊழியர்கள் விக்டோரியாவிடம் தெரிவித்தனர்.

அந்த தகவலையடுத்து, விக்டோரியா உண்மை நிலையை புரிந்து கொண்டார். மேலும், தனது கணவரை அவர் கண்ணீர் மல்க வரவேற்றார். கணவன் இறந்து விட்டார் என வேறு நபரை அடக்கம் செய்த பின்னர் உண்மையான கணவர் உயிருடன் வந்த சம்பவம் ஹோண்டுராஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US