நாடொன்றில் மேலுமொரு போலியோ வைரஸ் அடையாளம்
பாகிஸ்தானில் இரண்டாவது போலியோ தொற்று சம்பவம் வடக்கு வசிரிஸ்தானில் இரண்டு வயது சிறுமியிடம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே மற்றொரு தொற்று சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் மேலும் போலியோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறித்து சுகாதார அமைச்சு கவலையை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் போலியோ தொற்றை ஒழிப்பதற்காக அவசர அடிப்படையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் அப்துல் காதிர் படேல் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பாகிஸ்தானில் அண்மைய ஆண்டுகளில் போலியோ வேகமாக குறைந்து வந்த நிலையில் , அதன் அண்டைய நாடான ஆப்கானுடன் , உலகில் போலியோ பாதிப்பு உள்ள நாடாக பாகிஸ்தான் தொடர்ந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.