இந்திய பிரதமர் டென்மார்க்கில் தலைவர்களுக்கு வழங்கிய பரிசுகளின் சுவாரசியம்!
Prime minister
Narendra Modi
Government Of India
By Shankar
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் 2-வது கட்டமாக டென்மார்க் சென்றுள்ளார்.
அங்கு அவர் டென்மார்க் நாட்டின் ராணி இரண்டாம் மார்கிரேத்தை சந்தித்தார். இதேவேளை, இந்திய-நார்டிக் உச்சி மாநாட்டில் 4 நாடுகளின் தலைவர்களை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்புகளின்போது அவர் இந்தியாவின் சார்பில் பல்வேறு நினைவுப்பரிசுகளை அவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார்.
அவர் அளித்த பரிசுகள், இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களின் சிறப்பான, மாறுபட்ட பாரம்பரியத்தின், கலாசாரத்தின் பிரதிபலிப்புகளாக அமைந்தன.
அது பற்றிய சுவாரசிய தகவல்கள்,
- டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத்துக்கு பிரதமர் மோடி குஜராத் மாநிலம் குட்ச் நகரில் தயாரிக்கப்படுகிற துணியிலான ரோகன் ஓவியத்தை அன்பு பரிசளித்தார்.
- பட்டத்து இளவரசி மேரிக்கு வாரணாசியின் வெள்ளியிலான மீனகரி பறவை வடிவத்தை வழங்கினார்.
- பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு ராஜஸ்தான் மாநிலத்தின் சிறிய வெண்கல மரத்தை பரிசளித்தார்.
- நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருக்கு ‘கோப்ட்கிரி கலை வடிவ தால்’ பரிசாக வழங்கினார்.
- டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனுக்கு குட்ச் நகர சுவர் அலங்கார எம்பிராய்டரி கைவினைப்பொருளை நினைவுப்பரிசாக கொடுத்தார்.
- சுவீடன் பிரதமர் மகதலேனா ஆண்டர்சனுக்கு காஷ்மீரின் பஷ்மினா சால்வையை அலங்கார பெட்டியில் வைத்து வழங்கினார்.
- டென்மார்க் பட்டத்து இளவரசர் பிரடெரிக்கிற்கு சத்தீஷ்கார் மாநிலத்தின் டோக்ரா படகை (இரும்பு அல்லாத உலோக வார்ப்பு) பரிசாக தந்தார். இந்த பரிசுகளை பெற்று தலைவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US