திருகோணமலையில் பெரும் சோக சம்பவம்: 6 மாணவர்கள் உயிரிழப்பு! பலர் மாயம்
திருகோணமலை - கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இழுவை படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காணாமல் போயுள்ளார்கள்.
இச்சம்பவம் இன்று (23.11.2021) காலை இடம் பெற்றுள்ளது.
கிண்ணியா நகர சபை பிரதேச சபையையும் இணைக்கும் பாலமே குறிஞ்சாக்கேணி பாலமாகும். இக் குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கினர்.
பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து சம்பவித்திருக்கிறது. காப்பற்றப்பட்ட 11 பேர் நோயாளர் காவு வண்டியின் மூலமாக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்கள்.
இவ்விபத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் மரணித்துள்ளதோடு, பலர் காணாமல் போயுள்ளார்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக இடம் பெற்று வருகிறது.