அமெரிக்காவில் அடுத்தடுத்து நடைபெறும் வன்முறை சம்பவங்கள்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் இரு வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 07 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் 11 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு வடக்கு கலிபோர்னியா, லோவாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து இன்று வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஹாஃப் மூன் பே என்ற இடத்தில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து நடைபெறும் வன்முறை சம்பவங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் வௌியிட்டுள்ளது.
மேலும் தாக்குதல் நடத்தியவர் 67 வயதான உள்ளூர்வாசி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.